முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Tuesday, February 8, 2011

எட்டும் தொலைவில் தமிழீழம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன், காந்தளகம் பதிப்பகத்தின் உரிமையாளர்; ஐ.நா. உணவு வேளாண் அமைப்பின் ஆலோசகராகப் பணியாற்றியவர்; www.tamilnool.com, http://thevaaram.org ஆகிய இணையதளங்களை உருவாக்கி நடத்துபவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்தவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்.... எனப் பல பெருமைகளுக்கு உரியவர்.

தமிழக முதல்வர் கருணாநிதியுடன் நட்புப் பூண்டவர். 27.04.2009 அன்று சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட திடீர் உண்ணாவிரதத்தின் போது அவரைச் சந்தித்தார். உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார். அதே நாளன்று மதியம், சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணன், சச்சிதானந்தனுடன் மின் அரட்டை வழியே உரையாடினார். அந்த இ-நேர்காணல் வருமாறு:

அ.க.: இன்று கலைஞரைச் சந்தித்து என்ன பேசினீர்கள்?

சச்சிதானந்தன்: உண்ணாவிரதம் வெற்றிபெற வேண்டும். ஈழத்தில் போர் நிறுத்தம் வரவேண்டும். விரைந்து அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் எனக் கூறினேன்.

வெளியே வந்ததும் தொலைக்காட்சியினர் பேட்டி கேட்டனர்.

இராசபக்சா அரசு கொடுமையான அரசு. யார் சொல்லையும் கேட்காத அரசு. ஒபாமா சொல்லிக் கேட்கவில்லை. பிரித்தானியப் பிரதமர் சொல்லிக் கேட்கவில்லை. தோக்கியோக் கூட்டு நாடுகள் பல முறை சொல்லியும் கேட்கவில்லை. இந்தியா பல முறை சொல்லியும் கேட்கவில்லை. வேறு வழியில்லை என்பதால் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கலைஞர் உண்னா நோன்பு இருக்கிறார். ஈழத் தமிழருக்கு இதனால் நன்மையே கிடைக்கும் எனக் கூறிவிட்டு வந்தேன்.

அ.க.: இது உச்சக்கட்ட நாடகம் என்று வைகோ கூறியிருக்கிறாரே?

சச்சிதானந்தன்: தமிழக உள்கட்சி அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை. எல்லோருடைய ஆதரவும் ஈழத் தமிழருக்குத் தேவை.

அ.க.: கலைஞர் உங்கள் காதில் கிசுகிசுத்தது என்ன?

சச்சிதானந்தன்: சேதுக் கால்வாய் தொடர்பாக மூன்று நாள்களுக்கு முன் உங்கள் தொலைக்காட்சிப் பேட்டியைப் பார்த்தேன். நன்றாக இருந்தது எனக் கலைஞர் என்னிடம் தெரிவித்தார்.

அ.க.: இந்தப் போர் நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

சச்சிதானந்தன்: போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்த ஒரு மணி நேரத்துக்குள் வானிலிருந்து கொடும் தாக்குதலை இன்று (27.4.2009) மணி 12.50க்கும் 13.10க்கும் இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்த்தியதாகப் செய்தித் தொடர்பாளர் புலித்தேவன் கூறிய செய்தி மின்னம்பலத்தில் உள்ளதே.

இராசபக்சாவின் கபட நாடகத்தின் உச்சக் கட்டம் இதுவன்றோ? சொல்வதைச் செய்யமாட்டார், செய்வதைச் சொல்லமாட்டார். இராசபக்சாவின் உண்மை வடிவத்தை உணராதார் பேதைகளே!

1050 ஆண்டுகளுக்கு முன் சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன் இவ்வாறு ஏமாற்றியதால் இராசராசன் படையெடுத்து இலங்கையின் பாதியைக் கைப்பற்றினான். பின்னர் இராசேந்திரன் முழுமையாகக் கைப்பற்றி மகிந்தனைச் சிறைப்பிடித்தான். சிங்களத்தை வென்றதால் சிங்களாந்தன் என்ற சோழ மன்னரின் பட்டப் பெயரில் தமிழகத்தில் ஊர் ஒன்று இருப்பதை நினைவூட்டுகிறேன்.

இந்த மகிந்தனுக்கும் அதே கதி விரைவில் வரும். பொறுத்திருந்து பாருங்கள்.

அ.க.: அப்படியானால், போர் நிறுத்தம் என்பது வெறும் வார்த்தைதானா?

சச்சிதானந்தன்: எல்லோருக்கும் ஏமாற்றமே. இராஜபக்சா யார் சொல்லையும் கேட்கமாட்டார். இந்தியா அவரை வற்புறுத்தியதில்லை. பிரபாகரன் இல்லாத சூழலை இந்திய அதிகார வர்க்கம் விரும்புகிறது. இஃது இராசபக்சாவுக்குத் தெரியும். தமிழக மக்களையோ, அரசியல் தலைவர்களையோ இந்திய அதிகார வர்க்கம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. பொட்டு அம்மானையாவது சரணடையச் சொல்லுங்கள் என இந்திய அதிகாரிகள் கொழும்பில் வைத்துத் தமிழர் கூட்டமைப்புச் சம்பந்தனைக் கேட்டதை மறக்கமுடியுமா? இந்தியாவுக்கு விருப்பமானதைச் செய்து கொடுக்கும் இராசபக்சே, போரைத் தொடருவார். கலைஞருக்கு மேலும் அவப்பெயர் தேடுவதில் இராசபக்சாவின் பிரித்தாளும் ததந்திரம் வெற்றி பெறும்.

அ.க.: இதை அறிந்தால், கலைஞர் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்குவாரா?

சச்சிதானந்தன்: அவரின் அடுத்த நடவடிக்கையை நான் ஊகிக்க முடியாது.

அ.க.: தமிழ் ஈழத்துக்கு இலங்கைக்குள் இடமில்லை எனக் கோதபாயா ராஜபக்சே கூறியுள்ளாரே?

சச்சிதானந்தன்: போரை நடத்துவதற்கும் இனப் படுகொலையைத் தொடர்வதற்கும் சிங்களவர் கொண்டுள்ள அறிந்தும் அறியாதது போலச் சொல்லும் காரணங்களை மேலோட்டமாகவே பார்க்க. ஆழமான பொருள் அதில் இல்லை. தமிழீழம், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம். இதை அறியாதவரல்ல கோதபாயா.

அ.க.: ஈழத் தமிழர் சிக்கல் தீரத் தமிழ் ஈழமே ஒரே வழி என்ற ஜெயலலிதாவின் அறிவிப்புக் குறித்து?

சச்சிதானந்தன்:

1. போர் நிறுத்தம்.

2. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தனியான ஈழத் தமிழர் தாயகத்தில் ஈழத் தமிழருக்கு இயல்பான உரிமைகள்.

3. மேல் இரண்டும் இல்லை எனில் விடுதலை பெற்ற தனி நாடாக ஈழம்.

4. 10,000 கோடி ஈழத் தமிழர் மீளமைப்பு நிதி.

5. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இல்லை.

நாகர்கோயில் கூட்டத்தில் இந்த ஐந்து அம்சத் திட்டத்தை முன்வைத்த ஜெயலலிதா, மூன்றாவது அம்சத்தை மீண்டும் வலியுறுத்துகிறார். சேலம் கூட்டத்தில் முதல் இரண்டுக்கும் வாய்ப்பில்லை எனக் கூறி உள்ளார்.

கும்பகோணம் இரவிசங்கரை ஜெயலலிதா மேற்கோள் காட்டியதை அந்த இரவிசங்கர் மறுத்திருக்கிறார், மீண்டும் இராசபக்சாவைச் சந்திக்கும் இரவிசங்கரின் நப்பாசையில் இருப்பவர் இரவிசங்கர். இலங்கையில் அமைதியைக் கொணர்ந்தால் நோபல் பரிசு தனக்கும் கிடைக்கும் என்ற கனவில் இருப்பவர் இரவிசங்கர்.

ஜெயலலிதா சொன்னதற்காக மட்டுமல்ல, ஈழத் தமிழரின் ஒரே அரசியல் நோக்கம் தமிழீழம் என்பதால் சேலம் பேச்சு வரலாற்றுப் பதிவே.

அ.க.: இலங்கையை ஆதரிக்கும் சீனா, ஈழத்துக்கு எதிராகச் செயல்படுவது போல் இருக்கிறதே?

சச்சிதானந்தன்: முன்பு இங்குள்ள பொதுவுடைமைவாதிகள் எம் அரசியல் நோக்கத்தை ஏற்கவில்லை. 2.10.2008 சென்னை உண்ணா நோன்பு பொதுவுடைமைக் கட்சிகளின் உபயம். அன்று முதலாகத் தமிழகத்தையே ஈழத்தை நோக்கி விழிக்க வைத்தவர்கள் அவர்கள். ஈழத் தமிழரின் அளவற்ற பொறுமையே சிங்களவரின் வெறுமையைத் தோலுரித்துக் காட்டியது பொதுவுடைமைவாதிகளுக்கு. சீனாவுக்கும் அதே நிலைதான். காலம் கனியும். சீனா எங்களை ஏற்கும்.

அ.க.: இந்தச் சூழலில் ஈழ மக்களும் விடுதலைப்புலிகளும் செய்ய வேண்டியவை என்னென்ன?

சச்சிதானந்தன்: நம்பிக்கையே வாழ்வு. ஈழத் தமிழர் விதிவிலக்கல்ல.

அ.க.: தமிழீழம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?

சச்சிதானந்தன்: எட்டுகின்ற தொலைவில்தான்..!
Apr 28, 2009

==============================================
நன்றி: சென்னை ஆன்லைன்

ஆவணி சதுர்த்தி மறவன்புலவு 11 9 10



காணொலி ஆக்கம் - மறவன்புலவு க. சச்சிதானந்தன்

Thursday, February 3, 2011

தந்தை செல்வநாயகம் தந்த கொள்கை

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

(தந்தை செல்வாவின் 111ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை, தினக்குரல் இதழில் பிரசுரமானது)

இலங்கைத் தமிழரின் அரசியல் வாழ்வில் முப்பது ஆண்டுகள் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவராகக் கோலோச்சிய திரு. சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மறைந்து முப்பத்திரண்டு ஆண்டுகளாகின்றன. 1977 ஏப்ரல் 26 இல் மறைந்த அவர், 1947 இல் இலங்கைத் தமிழரின் அரசியல் வாழ்வில் கால்வைத்தார்.

கொழும்பில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களுள் ஒருவர், பிரிட்டிஷ் இராணியின் வழக்கறிஞர் எனப் பட்டம் பெற்றவர், பொருளாதார வசதிமிக்கவர், இவரைப் போன்றவர்கள் தமிழர் அரசியலில் ஈடுபட வேண்டும் என அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம் விரும்பி அழைத்தார். காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் 1947 இல் பாராளுமன்ற உறுப்பினராகத் திரு. செல்வநாயகம் தேர்வாகி அரசியலில் நுழைந்தார்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குப் பின், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது. அரசில் பங்குபற்றியது. பொன்னம்பலம் தொழில் மீன்வள அமைச்சரானார்.

1948 மார்கழியில் இலங்கையின் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டத்தை அரசு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பொழுது திரு. செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்தார். குடியுரிமையைப் பறிக்கும் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தார். அவரும் திரு. வன்னியசிங்கமும் திரு. நாகநாதனும் பிறருமாக, 1948 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியை நிறுவினர்.

1949 மார்கழி 19 ஆம் நாள், கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் திரு. செல்வநாயகம் ஆற்றிய தலைமை உரையில் பின்வருமாறு கூறினார்.

9 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் வடக்கில் உள்ள தமிழரின் நிலப்பகுதிகளில் தமிழரின் ஆட்சி மீண்டும் தொடங்கியது. தீவின் தெற்கேயுள்ள சிங்கள நிலப்பகுதிகளைச் சிங்களவர் ஆட்சி செய்தனர். சில சமயங்களில் ஒன்றிற்கு மேலான சிங்கள அரசுகள் தென்னிலங்கையில் இருந்தன.

காலம் மாறினாலும் சிங்கள அரசும் தமிழ் அரசும் தனித்தனியாக நெடுங்காலம் தொடர்ந்தன. ஐரோப்பியர்கள் வந்ததும் முதலில் தமிழரின் அரசைக் குலைத்தார்கள். பின்னர் சிங்கள அரசுகளைக் குலைத்தார்கள். பல நூற்றாண்டுகளாக இருந்த சிங்கள தமிழ் நாடுகளைப் பிரித்தானியர் இணைத்தனர். ஆட்சித் தேவைக்காக மட்டும் இணைத்தனர். இந்த இரு நாடுகளும் இயற்கையாக ஒன்றிணையவில்லை.

பெரிதும் சிறிதுமாக உள்ள மொழிவழி இனங்களிடையே ஏற்படும் முரண்பாடுகள் போருக்குக் காரணமாக இருந்துள்ளன. இப்போர்களில் வல்லரசு நாடுகளும் சேர்ந்ததும் உண்டு.

மொழிவழி இனங்களிடையே உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு இரு வழிகள் உள.

ஒவ்வொரு மொழிவழி இனத்துக்குமாக இறைமையுடைய ஒவ்வொரு நாட்டை அமைக்கப் பரந்த நிலத்தைத் துண்டாடுதல் ஒரு வழி ஒவ்வொரு இனத்துக்குமாகத் தன்னாட்சியுடைய மாநிலங்களை அமைத்து, மாநிலங்கள் இணைந்து நடுவண் அரசை அமைக்கிற கூட்டாட்சி அரசை உடைய ஒரே நாட்டை அமைத்தல் மற்றொரு எளிதான வழி இத்தகைய வழிகளுக்கமையச் செயற்படுவதாயின், மொழிவழி இனங்கள் தத்தமக்கு எனத் தனியான நிலப்பகுதியைக் கொண்டிருக்க வேண்டும். தமிழராகிய நாங்கள் கேட்கிற தீர்வு இதுதான். தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம் தன்னாட்சி உடைய சிங்கள மாநிலம் இரண்டு மாநிலங்கட்கும் பொதுவான கூட்டாட்சி அரசியலமைப்பு.

"சிறியதான தமிழ் நாட்டினம் அழிந்து போகாமலும், பெரிதான சிங்கள நாட்டினத்தால் விழுங்கப்படாமலும் இருப்பதற்குரிய ஆகக் குறைந்த ஏற்பாடு கூட்டாட்சி அரசியலமைப்புத் தீர்வு இதுதான்'

1948 இலிருந்து 1976 வரையாக அவர் சார்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் இலங்கைத் தீவில் இரு இனங்களும் அமைதியாக வாழக் கூட்டாட்சி முறையில் அரசு ஏற்படுத்தப் பல வழிகளில் முயன்றார்கள். 1949 இலிருந்து 1976 வரை திரு. செல்வநாயகமும், அவர் சார்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியினரும் இலங்கைத் தீவில் இரு இனங்களும் அமைதியாக வாழக் கூட்டாட்சி முறையில் அரசு ஏற்படுத்தப் பல வழிகளில் முயன்றார்கள்.

1958 இன் பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம், 1965 இன் டட்லி செல்வநாயகம் ஒப்பந்தம் என்பன, சிங்களவரும் தமிழரும் ஒரே ஆட்சியின் கீழ், கூட்டாட்சி அரசு அமைப்பதை நோக்கிச் செல்லும் படிக்கட்டுக்களே. எனினும், இந்த ஒப்பந்தங்களைச் சிங்கள அரசுகள் ஒரு தலைப்பட்சமாகக் கைவிட்டன.

1947 இல் இலங்கைக்கு ஆங்கிலேயர் வழங்கிய அரசியலமைப்பை, 1972 இல் சிங்களவர் தூக்கியெறிந்தனர். 1971 இல் புதிய அரசியலமைப்பை எழுதிய பொழுது, திரு. செல்வநாயகம் தலைமையில் அரசியல் நிர்ணய சபைக்குச் சென்ற தமிழர் பிரதிநிதிகள், அனைத்துக் கட்சித் தமிழர் சார்பில் ஆகக் குறைந்த கோரிக்கைத் தீர்மானங்களை முன்வைத்தனர். இத்தீர்மானங்களைச் சிங்களவர் ஏற்றுக் கொள்ளவில்லை. வாக்கெடுப்பில் தோற்கடித்தனர். இதைத் தொடர்ந்து திரு. செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியினர் அரசியல் நிர்ணய சபையில் இருந்து வெளியேறினர். அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணித்தனர்.

1972 மே 22 ஆம் நாள் சிங்களவர் சேர்ந்து இயற்றிய புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. அந்த அரசியலமைப்பின் பிரதி ஒன்றை, 1972 மே 25 ஆம் நாள், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையாரின் நாவலர் மண்டபத்தில் பலர் முன்னிலையில் திரு. செல்வநாயகம் தீயிட்டுக் கொளுத்தித் தமிழ் மக்கள் அந்த அரசியலமைப்பை ஏற்கவில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

அதைத் தொடர் ந்து அதே ஆண்டில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு வருமாறு சகல தமிழ் அரசியல் கட்சிகட்கும் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் வந்திருந்தன. அங்கு அவர்கள் தமிழர் கூட்டணி என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.

1972 அக்டோபர் 3 ஆம் நாள் தனது பாராளுமன்றப் பதவியைத் திரு .செல்வநாயகம் உதறித் தள்ளினார். விலகுமுன் அவர் பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றினார்.

"....தமிழர் கூட்டணியின் தலைவர் என்ற வகையில் இச்சபையில் எனது உறுப்புரிமையை நான் துறந்து, எனது கொள்கையை முன்வைத்து நான் மீண்டும் போட்டியிடும் பொழுது, அரசாங்கம் தனது கொள்கையை முன்வைத்து என்னோடு போட்டியிட வேண்டும் என்று கேட்கிறேன்' அத்தேர்தல் முடிவு தமிழ் மக்களது தீர்ப்பாகவே இருக்கும்.

"....தமது வருங்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை தமிழர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கையாக இருக்கும். விடுதலை பெற்ற மக்களாக வாழவேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு மக்களை நான் கேட்பேன்.'

1972 இல் இடைத் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்திய அரசு 1975 பெப்ரவரி 6 ஆம் நாள் தேர்தலை நடத்தியது. அத்தேர்தலில் திரு. செல்வநாயகம் மிக அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றார். பாராளுமன்றம் சென்றார். தமிழர்களின் விடுதலை முயற்சியை அங்கு அறிவித்தார். 1976 பெப்ரவரி 4 ஆம் நாள் "தமிழீழம் விடுதலைபெற்ற இறைமையுடைய நாடாகப்' பாராளுமன்றம் ஏற்றுக் கொள்கிறது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

"....இடைத் தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை விடுதலைபெற்ற இறைமையுடைய மதச்சார்பற்ற சமதர்ம நாடான தமிழீழத்தை அமைப்பதற்குரிய ஆற்றலுரிமையாக ஏற்றுக்கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது'.

இத்தீர்மானம் இலங்கைப் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

1976 மே 14 ஆம் நாள் தமிழர் கூட்டணி தனது பெயரைத் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றிக் கொண்டது. திரு. செல்வநாயகம், திரு. பொன்னம்பலம், திரு. தொண்டமான் ஆகிய மூவரையும் கூட்டுத் தலைவர்களாகத் தெரிவு செய்தது.

அந்நாளில் வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் இறைமையும் தன்னாட்சியும் சுதந்திரமும் உடைய சுதந்திர நாடாகத் தன்னைத் தமிழீழம் அமைத்துக்கொள்ளும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். தனது வாழ்நாளில் இறுதிவரை செல்வநாயகம் எந்த அரசுப் பதவியையும் வகிக்கவில்லை. எந்தத் தனிப்பட்ட சலுகையையும் பெறவில்லை. செல்வந்தராக அரசியலில் நுழைந்த அவர், சில காலங்கள் தனது செலவுக்குக் கூடச் சக பாராளுமன்ற உறுப்பினர்களின் நன்கொடையை எதிர்பார்த்து வாழவேண்டி வந்தது.

1949 இல் இரு வழிகளைப் பற்றிக் கூறிய அவர், 1972 வரை கூட்டாட்சி அரசியலமைப்பைச் சிங்களவர் ஏற்றுக்கொள்ளப் பலவாறு முயன்று தோல்வியடைந்தார். அந்த வழியில் சென்று உரிமை பெறாத மக்கள், மற்ற வழியில் செல்லும் காலம் வந்துவிட்டதை உணர்ந்து அதற்காகத் தமிழ் மக்களைப் படிப்படியாக 1972 இல் இருந்தே தயார் செய்து 1976 இல் தீர்மானமாகக் கொண்டுவந்தார்.

தனது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பல அரசியல் போராட்டங்களை நடத்தினார். அவை அனைத்தும் அறவழிப் போராட்டங்களாகவே அமைந்தன. அவரின் நேர்மையும் உறுதிகுன்றாக் கொள்கைத் தெளிவும் தமிழ்மக்களைக் கவர்ந்தன. அதனால், அவர்கள் அவரைத் தந்தை செல்வநாயகம் என அழைத்தனர். அவர் காட்டிய வழிகளைச் சரியான வழிகள் எனக் கைக்கொண்டனர்.

* அவர் சமயத்தால் கிறிஸ்தவரானாலும், சைவர்களான பெரும்பான்மையான தமிழர்கள் அவர் தலைமையை ஏற்று அவர் நடத்திய போராட்டங்களுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.

"தமிழீழம் அமைப்பது வில்லங்கமான ஒரு காரியம்' என்று அவர் கூறினார். எனினும், அதைத் தவிர வேறுவழிகள் மூலம் தமிழ் மக்கள் அடிமைத் தளையை அகற்ற முடியாது என அவர் திரும்பத் திரும்பக் கூறினார். ஒரு முழுமையான விடுதலைப் போராட்டத்துக்குத் தமிழ் மக்களைச் சிந்தனை ரீதியாகத் தயார்செய்து விட்டுத்தான் அவர் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவர் விதைத்துச் சென்ற விடுதலை உணர்வுகள் இன்றும் மறையாமலே உள.

(நன்றி: www.thinakural.com)

===============================
http://chandrapuram.blogspot.com/2009/04/blog-post.html

ஈழம் ஈந்த கலைஞன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


 2008 ஐப்பசியில் சிட்னியில் குறுந் திரைப்பட விழா. அரங்கில் நான் இருந்தேன். அருமை நண்பர் நடராசா கருணாகரன் அன்புடன் அழைத்திருந்தார். சம காலத்தின் மறுபதிப்பாக ஒரு குறும் படம்.

பிரான்சுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழரான ஒரு முதியவர். பிரான்சிலேயே பிறந்து வளர்ந்த அவரது பெயர்த்தி. தலைமுறை இடைவெளி, புலம்பெயர் சூழலின் வாழ்வுமுறை, மொழி இடைவெளி, வாழ்வியல் நோக்கம், அயலவர் தாக்கம், முதுமை யாவற்றையும் கால்மணி நேரத்தில் உணர்த்தும் குறும்படம். தொழினுட்பத்தின் வளர்ச்சியை உள்வாங்கித் தமிழ்ச் சூழலை வெளிக்காட்டும் குறும்படம். முதியவராக ஏ. ரகுநாதன்.

நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து என்றார் மணிவாசகர். ஏ. ரகுநாதன் முதியவராக அக்குறும் படத்தில் நடிக்கவில்லை. இறைவன் முன் அடியவராக நடிக்கமுடியாததுபோல, படப்பிடிப்புக்கருவிமுன் முதியவராகவே மாறியிருந்தார் ஏ. ரகுநாதன்.

அந்தக் கால்மணி நேரமும் பிரான்சில் அவருடன் இருந்தேன். சிட்னியில் இருந்தேனா? பிரான்சில் இருந்தேனா? புலம்பெயர் சூழலில் இருந்தேனா?
நறுந்தேன் சுவையாய் அக்குறும்படச் செய்தியின் தாக்கம் என்னிடமிருந்து நீங்க நாள்கள் பலவாயின. மீண்டும் மீண்டும் நினைவில், கனவில், வாழும் என் நிகழ்வுகளில் ரகுநாதன். கலையரசு சொர்ணலிங்கத்திடம் பயின்றவர், நாடகமே உலகமானவர், நடிப்பே வாழ்வானவர், அறங்களை எடுத்துரைக்க நடிப்புக் கலையை நன்கு பயன்படுத்தியவர்.

கடமையின் எல்லை, நிர்மலா, தெய்வம் தந்த வீடு ஆகிய மூன்று திரைப்படங்களில் அவரைப் பார்த்திருக்கிறேன். தமிழகத்தில் அவற்றைத் தயாரித்திருந்தால் ஏ. ரகுநாதனுக்குச் சுவைஞர் மன்றங்கள் எத்தனை அமைந்திருக்கும்? பாலு. மகேந்திரா, வி. சி. குகநாதன், சிலோன் விஜயேந்திரன் போன்று தமிழ்த் திரை உலகில் ஈழத்து முத்திரை பதித்திருப்பார்! விடாது கலையுலகில் தொடர்கிறார், தொடாத துறைகள் இல்லையென நடிக்கிறார், கொடாத சுவைகளைத் தெரிந்து தருகிறார், படாத பாடு கலைக்காகப் படுகிறார்.

பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்ற வாழ்வு அவருடையதல்ல. பிறந்தோம், மொழி பயின்றோம், காதல் கொண்டு நடித்தோம், அரங்குகளில் திரைகளில் தடம் பதித்தோம், அளப்பரிய நிகழ்வுகளில் கலைக்கோயில்கள் எழுப்பினோம், வாழ்வு வரலாறாகியது என்றவாறு அமைத்து வாழ்ந்தவர், அமைத்து வாழத் தொடர்பவர், அருமைக் கலைஞர், ஈழம் ஈந்த இன்கலைமாமணி ஏ. ரகுநாதன்.

பொன் விழா, மணி விழா எனத் தொடர்ந்தவர், பவளவிழாக் காண்கிறார். உர நெஞ்சுடன், உறுதி உடலுடன் ரகுநாதன் நூறாண்டு நூறாண்டு வாழ்க, அவர் புகழ் கலை உலகு நீளும் வரை நீள்க என நெஞ்சார வாழ்த்துகிறேன்.

சிட்னி, (1.7.2010)

==========================
http://ularuvaayan.blogspot.com/2010/07/blog-post.html

பார்வதி அம்மாளுடன் சச்சிதானந்தன்

பிரபாகரனின் தாயார், திருமதி வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளுடன் சச்சி. உடன் பத்ரி சேஷாத்ரி.

 நாள் - 19.09.2010

மேலும் -நினைவில் நீங்கா நிகழ்வுகள்

அறிவியல் கண்ணோட்டம் கொண்ட தமிழறிஞர்

அண்ணாகண்ணன்

தமிழுக்கும் தமிழருக்கும் நாளும் பொழுதும் வலிவும் பொலிவும் சேர்க்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்கள், கார்த்திகை 17ஆம் நாள், மிருகசீரிட நட்சத்திரத்து அன்று பிறந்தவர். ஆங்கில நாட்காட்டியின்படி இவர் பிறந்த நாள், டிசம்பர் 5ஆம் நாள்.



நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; ஐ.நா. உணவு - வேளாண் கழக முன்னாள் ஆலோசகர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம் (http://www.tamilnool.com), தேவாரம்.ஆர்க் (http://thevaaram.org) தளங்களின் நிறுவனர் - வழிகாட்டி - காப்பாளர்; அண்மையில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர்....... எனப் பற்பல பெருமைகளுக்கு உரியவர், நம் சச்சிதானந்தன்.

ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு: The Photosynthesis Day என்பதாகும். இத்தகைய அறிவியல் கண்ணோட்டம் கொண்டவர், இவர்.

தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டபூர்வ - தனி நபர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்துள்ளவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டும் வண்ணம் செயலாற்றி வருகிறார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கொண்டவர்.

எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கபூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை..... ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார்.

மனிதன், மரணத்தை வெல்லும் நாள் நெருங்கி வருவதால், ஒரு நூற்றாண்டு வாழ்க என்பதே கூட சுருக்கமாக வாழ்த்தாகலாம். எனவே சச்சிதானந்தன், காலத்தை வென்று வாழ்க என வாழ்த்துகிறேன்.

=========================================
http://annakannan.blogspot.com/2009/12/blog-post.html

சோழன் குடா நக்காவரம் தமிழர்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஆடையின்றி ஒருவர் வந்தார். நகைப்புக்குரியவராக, பழிப்புக்குரியவராக, இழிவுக்குரியவராக, தாழ்வானவராக, கேலிக்குரியவராக, கிண்டலுக்குரியவராக அவரை ஆடையணிந்த சமூகம் கருதியது; ஆடையற்றவர் நகுதற்குரியவரானார்.

என் நாட்டைப் புகழ்ந்து பாடுவோர் போரில் நான் தோற்றால் என்னை இகழ்வாராக என வஞ்சினம் கூறியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் (புறநானூறு) எனத் தொடங்கும் அவனது வரிகள் புகழ்பெற்றவை.

நகுதக் கனர் என்பது காலப்போக்கில் நக்கர் ஆயிற்று. என்ன நக்கலா எனக் கேட்கும் பேச்சு வழக்கும் இன்று உண்டு. ஆடையற்றவர் நகுதற்குரியராதலால் நக்கர் ஆயினர்.

எவரோ ஒருவர் ஆடையற்றிருந்தால் நகுந்து விட்டுவிடலாம். ஒரு மனிதக் குழுவினரே ஆடையற்றிருப்பின் அவர்களுக்குப் பெயர் சூட்டவேண்டாமா? குழு, இனம், சாகியம், கணம் என்பனவும் சாரணர் ஆகும்.

ஆடையற்ற, நகுதற்குரிய மனிதர் கூட்டத்தினரே நக்க சாரணர். சூர்மலை வாழும் நக்க சாரணர், நயமிலர் என்ற மணிமேகலை (16 55, 56) வரிகளில் இந்தச் செய்தி உண்டு.சங்க காலத்திற்கு முன்பிருந்தே ஆடையின்றி அம்மணராக வாழ்ந்த நக்கசாரணர், அவ்வாறே மணிமேகலையின் காலத்திலும் ஆடையின்றித் தொடர்ந்தனர், இன்று வரை அவர்களுட் பலர் ஆடையின்றியே வாழ்கின்றனர்.

அந்த நக்கசாரணர் வாழ்கின்ற இடமே நக்காவரம். நக்காவரம்:

நிக்கோபார் என்ற இன்றைய வழக்குச் சொல் நக்காவரத்தின் போலி. அந்தமான் நிக்கோபார் என இன்று அழைக்கிறோமே, அத்தீவுக் கூட்டத்தில் வாழும் பழங்குடியினர் பலர் இன்றும் ஆடையின்றியே வாழ்கின்றனர்.

நக்காவரம் தீவுக் கூட்டத்தில், கொக்குத் தீவு, கச்சல் தீவு எனத் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட தீவுகள் பலவுள.பன்னெடுங்காலமாக நக்காவரத்துக்குத் தமிழர் சென்று மீள்கின்றனர். அங்கு வாழும் நக்கசாரணரின் மொழியில் வல்லவரான தமிழர், காலந்தோறும் வாழ்ந்துளர். பூம்புகார்த் தமிழனான சாதுவன், நக்காவரத்து நக்கசாரணரின் மொழியில் வல்லவனாயிருந்த செய்தியை, மற்றவர் பாடை மயக்கறு மரபின் கற்றவனாதலின் என மணிமேகலை (16 60, 61) கூறும்.

இன்றைய இந்தோனீசியாவில் உள்ள, சாவகத்துக்கு 1,800 ஆண்டுகளுக்கு முன் பூம்புகாரிலிருந்து புறப்பட்டுச் சென்று புத்தரின் கோட்பாட்டைப் பரப்பியவர் மணிமேகலை. கடல்வழி பயணித்த அவர், சாவக மொழியை அறிந்திருந்தார்.

மகேந்திர பல்லவன் காலத்தில், 1,400 ஆண்டுகளுக்கு முன், சாவகம், காம்போசம் ஆகிய பகுதிகளில் கோயில்கள் கட்ட, மாமல்லபுரச் சிற்பப் பாணியில் கட்ட, சிற்பிகள் சென்றனர். அங்கிருந்து வந்தோர் சிற்பக் கலையில் பயிற்சி பெற்றுச் சென்றனர்.

சீன நாட்டினருக்காக 1,000 ஆண்டுகளுக்கு முன் நாகப்பட்டினத்தில் தூபி அமைத்தவன் சோழப் பேரரசன் இராரசராசன்.

600 ஆண்டுகளுக்கு முன், மதுரைப் பாண்டிய இளவரசன் ஒருவன் தன் உடன்பிறப்பொடு எழுந்த பகையைப் போக்க, நாகப்பட்டினம் வழி தன் தூதரைச் சீனம் அனுப்பிச் சீனப் படையைத் துணை கேட்ட வரலாறும் உண்டு.

தமிழகத்தின் கிழக்குத் துறைமுகங்களான மாமல்லபுரம், பூம்புகார், நாகப்பட்டினம் துறைகளிலிருந்து கிழக்கே வணிகத்துக்காக, சமயக் கொள்கை பரப்புவதற்காக, கோயில்கள் கட்டுவதற்காக, பேரரசு அமைப்பதற்காக, அரசுகளுக்குத் தூது அனுப்புவதற்காகக் காலம் காலமாகத் தமிழர் தம் கப்பல்களில் சென்று வருகின்றனர்.

தமிழகத்தின் கிழக்குக் கரையை விட்டகன்று, கிழக்குற்றால் நெடுங்கடலைத் தாண்டியதும் முதலில் கண்ணுக்குத் தெரியும் நிலப்பகுதி நக்காவரம்.

சோழன் குடாவில் வலசை, இடசை:

சோழன் குடா நெடுங்கடலுக்கு ஆங்கிலேயர் இட்ட பெயர் வங்காள விரிகுடா; தமிழரிடை நெடுங்காலமாகப் பயின்றுவரும் பெயரே சோழன் குடா.
அக்குடாவில் தமிழரின் கப்பல் பயணத்துக்குத் இயற்கைத் துணைகள் மூன்று, 1. விண்மீன்கள், 2. காற்று, 3. கடல்நீரோட்டம்.

மீகாமானுக்கு இவ்வியற்கைக் கூறுகள் பற்றிய அறிவை, ஏடுகளும் தந்தன; பட்டறிவும் தந்தது. வானியல் ஏடுகள் தமிழில் நிறைந்திருந்தன; விண்மீன்களைப் பற்றிய அறிவு நிலத்திலேயே கிடைத்தது. காற்றையும், நீரோட்டத்தையும் அறியக் கடலில் பயணித்துப் பயிற்சி பெற்ற பட்டறிவே துணையாயது.

ஐப்பசியில் தொடங்கித் தையில் முடியும் வாடை; வைகாசியில் தொடங்கி ஆடியில் முடியும் தென்றல்: இவை கடுங் காற்றுகள். மாசி பங்குனியில் கொண்டல்; ஆவணி புரட்டாதியில் கச்சான்; இவை மென் காற்றுகள்.

வாடைக் கால நீரோட்டம், நக்காவரத்திலிருந்து வடக்கே போய், வங்காளக் கரையைத் தொட்டு, கலிங்கக் கரையோரமாக ஓடிவந்து தமிழகக் கரையைத் தழுவி, இலங்கையின் கிழக்குக் கரையோரமாகச் சென்று மீண்டும் நக்காவரத்துக்குச் செல்லும் வலசை (வலங்கை).

தென்றல் கால நீரோட்டம், இலங்கையின் கிழக்குக் கரையிலிருந்து புறப்பட்டு, தமிழகக் கரையைத் தழுவி, கலிங்கக் கரையோடு ஓடி, வங்கக் கரையைத் தொட்டு, நக்காவரம் வந்து, மீண்டும் இலங்கையின்கிழக்குக் கரைக்கு வருகின்ற இடசை (இடங்கை).

வலசையிலும் இடசையிலும் கடுவேக நீரோட்டத்தைக் காணும் சோழன் குடா, இடைக்காலத்தில் அலைகள் குறைந்த, வேகமற்ற காற்றுள்ள குளமாகி, கப்பல் பயணத்துக்கு ஏதாகி அமையும். மீகாமான்கள் இதை அறிவர்.

வலசையும் இடசையும் வரலாற்றுப் பதிவுகளாக உள. மணிமேகலையில் வலசையின் பாதிப்புச் செய்தி உண்டு; மகாவமிசத்தில் இடசையின் பாதிப்புச் செய்தி உண்டு.

நக்காவரத்தில் சாதுவன்:பூம்புகாரின் வணிகனான சாதுவன் கணவன், ஆதிரை அவனுக்கு மனைவி. பெரும் பொருள் ஈட்டினான் சாதுவன்; மனைவியை விட்டான்; கணிகையை நாடினான்; வட்டாடினான்: பொருள் அனைத்தையும் இழந்தான்; கணிகையும் நீங்கினாள். மீண்டும் பொருளீட்ட விழைந்தான். வணிகர்களுடன் பூம்புகாரில் மரக்கலம் ஏறினான்; கிழக்கு நோக்கிப் பயணமானான்.

ஐப்பசித் திங்களில் அவன் புறப்பட்டான். வாடையின் கடுங்காற்றுக் காலம்; வலசை நீரோட்டக் காலம். நெடுங்கடலில் அலைகள் அந்த மரக்கலத்தை உடைத்தன; அதிலிருந்த மிதப்புக் கட்டைகளைப் பற்றிய வணிகர் மிதந்தனர். தொடர்ந்து வந்த மரக்கலங்கள் மிதந்த வணிகர் சிலரை மீட்டன. சாதுவனை மீட்க முடியவில்லை.தப்பிய வணிகர் பூம்புகார் திரும்பினர்; இடைச் சாமத்திலே எறிதிரைகள் மரக்கலத் உடைத்தன; அந்த அழிவில் நாம் தப்பினோம், ஒழிந்தோருள் சாதுவனும் ஒருவன் என ஆதிரையிடம் செய்தி கூறினர்.

கணவனைக் கணிகைக்கு இழந்தவள், மீள்வான் என வாழ்ந்தவள், கடலுக்கு இழந்ததும் உயிர்நீக்க விழைந்தாள்; ஏதோ அவளைத் தடுத்தது; வருவான் கணவன் என ஆதிரை உயிர் தரித்திருந்தாள்.

நெடுங்கடலில் உடைந்த மரக்கலத்தின் மிதப்புக் கட்டை ஒன்றைப் பற்றிய சாதுவன் மூழ்கவில்லை; வலசை நீரோட்டத்துடன் அள்ளுப்பட்டான்; வடக்கே இழுத்த நீரோட்டம் நக்காவரத் தீவொன்றில் சாதுவனைக் கரைசேர்த்தது. மயங்கிய நிலையில் கரையில் ஒதுங்கிச் சாதுவன் கிடந்தான்.
நக்காவரத்தின் நக்கசாரணர் ஆடையற்றவர் மட்டுமல்ல, மனித உடலை விரும்பி உண்பவர். தனியனாகக் கரைசேர்ந்த சாதுவன், நல்ல உணவாவான் என மகிழ்ந்தனர். சாதுவனை நெருங்கினர்.

நக்கசாரணரின் மொழியில் சாதுவன் பேசத் தொடங்கினான். கேட்டதும் மகிழ்ந்த நக்கசாரணர், சாதுவனைத் தொழுதனர். தீவின் தலைவனிடம் அழைத்துச் சென்றனர். பேச்சினால் அத்தலைவனைத் தன்வயமாக்கினான் சாதுவன்.

உணவற்றுக் கடலில் அலைந்தவனுக்கு உணவு கொடுங்கள், இளம் பெண்ணைக் கொடுங்கள், புலாலும் கள்ளும் வேண்டும் வரை கொடுங்கள் என ஆணையிட்டான் அத்தலைவன்.

உணவைத் தவிர பிறவற்றை ஏற்க மறுத்தான் சாதுவன். புத்தரின் அறவுரைகளைத் அத்தலைவனுக்குப் போதித்தான். தலைவனும் நக்கசாரணரும் மனம் மாறினர். மரக்கலம் கவிழ்ந்து கரைவந்த மக்களை முன்பு உணவாக்கினோம், இனி அவர்களைக் காப்போம் என அத்தலைவன் சாதுவனுக்கு உறுதி அளித்தான். தைத்திங்களில் வலசை முடிந்தது; கடல் குளம்போலாயது; சந்திரதத்தன் என்பானின் மரக்கலம், மலைநாட்டிருந்து அவ்வழியே பூம்புகாருக்குப் போய்க்கொண்டிருந்தது. அந்த மரக்கலத்தை மறித்துச் சாதுவனை அதில் பரிசுப் பொருள்களுடன் ஏற்றிவிட்டான் தீவின் தலைவன். சாதுவனும் மாசித் திங்களில் பூம்புகார் திரும்பி ஆதிரையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான்.

நக்காவரத்தில் விசயனும் தோழர்களும்:வங்கத்துக்கு வடக்காக, மகதத்துக்குத் தெற்காக இலாலை நாடு. காடுகள் சூழ்ந்த இலாலை நாட்டின் அரசன் சிங்கபாகன்; பட்டத்து அரசி சிங்கவள்ளி.இவர்களுக்குப் பிறந்த அனைவரும் இரட்டையர்களாக முப்பத்திரண்டு ஆண்கள். மூத்தவனான விசயன் பட்டத்து இளவரசனான். விசயனுக்குத் தோழர்கள் பலர். விசயனும் தோழர்களும் தீய பழக்கங்கள் உடையவராயினர், வன்முறையில் ஈடுபட்டனர். குடிமக்கள் இதனால் துன்புற்றனர். மன்னனிடம் குடிமக்கள் முறையிட்டனர். இளவரசனையும் தோழர்களையும் மன்னன் இருமுறை எச்சரித்தான்; இளவரசனும் தோழரும் செவிசாய்க்கவில்லை.

தொல்லை பொறுக்காத குடிமக்கள் திரண்டனர்; இளவரசனைக் கொன்றுவிடுக என மன்னனிடம் கோரினர்.

விசயனையும் எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்த அரசன், அவர்களின் முடியை மழிப்பித்தான். கங்கை ஆற்றில் நின்ற மரக்கலத்தில் ஏற்றுவித்தான். அந்த மரக்கலம் கங்கை ஆற்றுவழியாக முகத்துவாரம் வந்தது; வங்கத்தின் தெற்கெல்லையில் கடலுள் பயணித்தது.

அது சித்திரை மாதம். கொண்டல் காற்று நின்றதும் தென்றல் வீசத் தொடங்கியது. சோழன் குடாவில் இடசை நீரோட்டம் தொடங்கிய காலம்.
மரக்கலத்தை நீரோட்டம் தென் கிழக்காக இழுத்துச் சென்றதால் நக்காவரத்தை மரக்கலம் அடைந்தது; நக்கர் தீவை (ஆடையற்றோர் தீவை) விசயனும் தோழர்களும் அடைந்தனர் என மகாவமிசம் (வரி 5.41) கூறும்.

விசயனின் தோழர்கள் அங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். எனவே விசயன் மீண்டும் அவர்களுடன் மரக்கலத்தில் ஏறினான். நீரோட்டத்தைப் பின்பற்றினான். இடசை நீரோட்டம் அவர்களைத் தெற்கே இழுத்து வந்து, இலங்கைத் தீவில் இயக்கர் நிறைந்து வாழ்ந்த தாமிரக் கடவையில் (இன்றைய தம்மன் கடவை) திருகோணமலைக்குக் கீழே கரைசேர்த்தது.

சித்திரையில் இலாலை நாட்டை விட்டுப் புறப்பட்டனர். வைகாசி முழுநிலா நாளில் விசயனும் தோழர்களும் (மகாவமிசம் 5.47) இலங்கையை வந்தடைந்தனர்.

நக்காவரமும் தமிழரும்:அந்தமான்நிக்கோபார் தீவுக் கூட்டம் என்ற பெயர் ஆங்கிலேயர் தந்தது. நக்காவரத் தீவுக் கூட்டம் என்பதே தொன்மைப் பெயர்; தமிழர் இட்ட காரணப் பெயர். 1,800 ஆண்டுகளுக்கு முந்தைய மணிமேகலையும் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய மகாவமிசமும் இந்தப் பெயரின் தொன்மையை உறுதி செய்கின்றன.அந்தத் தீவுக் கூட்டத்திலுள்ள இடப்பெயர்கள் பல தமிழாக உள. இன்று சிறிதே சிதைந்து, ஆங்கில ஒலிக்குள் புகுந்து பெயர்ப் போலிகளாகியுள.

தமிழகத்தின் கிழக்குக் கரையிலிருந்து மியன்மார், சீயம், மலைக்கா, சாவகம், காம்போசம், சீனம், நிகோன் போன்ற பல நாடுகளுக்குத் தமிழர் செல்லும் மரக்கலங்களின் முதற் தங்கிடமாக நக்காவரம் தீவுகள் இருந்தன. அங்கு வாழ்ந்த நக்கசாரணரின் மொழியைத் தமிழகக் கடலாடிகள் கற்றனர்; நக்கசாரணருடன் நல்லுறவு பூண்டனர், உதவி பெற்றனர், நாகரிகமுள்ளவராக்கினர், வணிகமும் செய்தனர்.

========================================
http://sachithananthan.blogspot.com/2005/08/blog-post.html

அறவழிப் போராட்டக் குழு அரங்கில் சீர்காழி சிவசிதம்பரம்



காணொலி ஆக்கம் - மறவன்புலவு க. சச்சிதானந்தன்

அறவழி மாணவருக்கு மிதிவண்டி நன்கொடை


காணொலி ஆக்கம் - மறவன்புலவு க. சச்சிதானந்தன்

KANAPATHIPILLAI SACHITHANANTHAN

KANAPATHIPILLAI SACHITHANANTHAN
Address: 68, Anna Saalai, Chennai 600 005 India.

Date of Birth: 5th December, 1941

Place of Birth: Jaffna, (Sri Lanka).

Education:

1992 M.A Degree in Tamil from the University of Madras.

1966 M.Sc. Degree in Zoology with Marine Biology from the University of Madras, under the Government of India General Scholarship Scheme.

1963 B.Sc. degree with Zoology as main subject and Chemistry as ancillary subject from the University of Madras obtaining a first class pass.

1958 Educated up to secondary school level in Jaffna. (at Maravanpulo, Sakalakalavalli Vidyasalai,1945-1948; at Jaffna Hindu College, 1949-1958)

Employment:

1980- Established Kaanthalakam, a book publishing house, in Chennai, India.

1979 (Aug.-1985 Dec.) Consultant, FAO/UN (Red Sea, Gulf of Aden, South West Indian Ocean)

1977 (Dec.-1979 July) Lecturer (Zoology), University of Jaffna.

1977-93 Established Kaanthalakam, a book publishing house, in Jaffna, after resigning from the Sri Lanka Scientific Service in August 1977, subsequent to the communal disturbances of July 1977.

1971 (Apr. to Aug.) Consultant, FAO/UN (South Pacific)

1967 (Jan. to 1977 Aug.) Research Officer (Sri Lanka Scientific Service), Fisheries Research Station, Colombo.

1966 (October ) Private Secretary to Hon. M. Tiruchelvam, Minister for Local Government

1966 (July-Sept.) Visiting Lecturer (Zoology), Jaffna College Undergraduate department.

1963 (Oct.-1964 Mar.) Government Clerical Service, Government of Ceylon.

Training:

1973 (August) Participated in the UNESCO training programme on Marine Microbiology at Nanyang University, Singapore for one month under the guidance of Professor Ralph A. Lewin (Scripps Institution of Oceanography), University of California.

1969 (June-December) Trained at Tokai Regional Fisheries Research Laboratory, Tokyo, Japan for six
months in Fisheries Biochemistry on a group training programme in Marine Fisheries Research, by the Overseas Technical Corporation Agency, Government of Japan.

Research:

1976 Extended investigations into processing of dried fish in Sri Lanka studying among other things the feasibility of a mechanical device to dry fish, jointly with engineers of Walker Sons Ltd. Colombo.

1969 Investigated into the problems related to the Beche-de-mer fishery of Sri Lanka.

1967 Continued scientific investigations in the Jaffna Lagoon, studying its physical, chemical and biological nature in relation to the revision of the Northern Province Fishery Regulations. Commended by one man committee of inquiry for the contribution, in his report on the revision of the regulations.

1964 (May - June) Accepted a Research Studentship Award to work on the physical and chemical
aspects of Jaffna Lagoon, under the guidence of Dr. K. D. Arudpiragasam, Zoology Department, University of Sri Lanka, Colombo. This study was temporarily terminated to be able to follow a course in India leading to the M.Sc degree.

Projects:

1984-1985 As consultant with FAO/UN - Project for development of Fisheries in the South West Indian Ocean, participated in many projects related to processing and marketing of fish and fishery products, including training programs, in Seychelles, Mauritius, Madagascar, Tanzania, Kenya and Somalia.

1979-1984 As consultant with FAO/UN - Project for development of Fisheries in the Red Sea and Gulf of Aden, participated in many projects related to processing and marketing of fish and fishery products, including training programs, in South Yemen, North Yemen, Saudi Arabia, Jordan, Egypt, Sudan and Djibouti.

1976 (December) Participated in a field experiment organised by the Association for Science Cooperation
in Asia at Cox’s Bazar, Bangladesh on an efficient method in sun drying fish.

1976 (June) Participated in the conference on handling, processing, marketing of tropical fish in London organised by the Tropical Products Institution, London.

1975-1976 Member, working party on Fish Technology Indo-Pacific Fisheries Council, FAO/UN since 1973, and attended its meetings in Bangkok 1975, London 1976, Colombo 1976. Also prepared a report for the working party on the dried fish trade in Sri Lanka.

1975 Organised the Quality Control Laboratory at the Fisheries Department to test check quality of frozen prawns and other fishery products destined for export from Srilanka. As officer in charge of the Quality Control Laboratory, supervised the work of two graduate level students on Fish Technology and the duties of four Laboratory Assistants.

1975 Member, Drafting Committee preparing standard requirements for frozen prawns, frozen lobsters, dried fish, canned fish and other related fishery products of the Bureau of Standards, Colombo.

1973-1975 Designed jointly with the engineers from Walker Sons Co. Ltd., a mechanical device (named de-scummer) for cleaning the scum off the outer surface of holothurians during processing, Prepared feasibility studies and participated in the implementation of Five Bechedemer Processing Factories in Sri Lanka (constructed in Mannar, Manthai, Nachchikudah, Kalpitiya and Triconmalee) by the respective District Development Councils of the Ministry of Planning. Two more feasibility studies (Chilavathurai, Jaffna) were with the Ministry of Planning for approval.

1971 (May-August) FAO/UN consultant in Beche-de-mer fishery in the South Pacific Islands, for four months based in Noumea, New Caledonia, travelling to Fiji, New Herbides, British Soloman Islands, Trust Territory of Pacific Islands, (Ponape, Truk, Marshal Islands Yap, Palau). Trust Territory of Papua and New Guinea, Philippines, Hongkong and Singapore.

Knowledge of Languages:

      Language         Degree of knowledge
  • Tamil         - Excellent
  • English       - Good
  • Sinhalese    - Working knowledge
  • Japanese    - Working knowledge
  • Arabic        - Working knowledge

Publications other than research contributions:

Frequent contributor of articles in Tamil and English, in periodicals, newspapers and radio in Sri Lanka, India, Singapore and Malaysia on popularisation of Science, Science in Tamil and Tamil research. Translated few English books on Zoology into Tamil for the Education Publication Department of Sri Lanka and other institutions.

Professional Societies:


  • General Research Committee, Sri Lanka Association for the Advancement of Science.
  • Plankton Society of Japan.
  • American Fisheries Society.
  • International Association for Tamil Research.
  • Marine Biological Association of India.
=============================
http://sachithananthan.blogspot.com/2005/09/kanapathipillai-sachithananthan.html