அன்பு,
அறம், மனித நேயம், இரக்கம் சார்ந்த அரசியல்
கொள்கையாளர்
மறவன்புலவு
க.
சச்சிதானந்தன்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில்
நான் மாணவன்.
கல்லூரிக்குப் பக்கத்தில்
உள்ள சாலையின்
பெயர் கல்லூரிச்
சாலை. நீராவியடிப் பிள்ளையார் கோயில்
வரை நீண்ட
சாலை. நீராவியடிக் கேணிக்கு முன்பாக
வழக்குரைஞர் அருளம்பலவனார்
இல்லம். அந்த இல்லத்துக்கு அடுத்த
இல்லத்தில் என்
வகுப்புத் தோழன்
குமாரலிங்கம் வாழ்ந்த
வீடு.
குமாரலிங்கத்தின் வீட்டு வாயியில்
போர்டு மகிழுந்து
ஒன்று மாலை
வேளைகளில் நிற்கும்.
நெடிதுயர்ந்த மனிதர்,
பக்க வகிடுடன்
நிறைந்த கருமுடியை
அழகாகக் கோதி
விட்டிருப்பார், வெள்ளை
வெளேரென வேட்டியும்
மெய்ப்பையுமாக இருப்பவர்
அந்த மகிழுந்தின்
சொந்தக்காரர். சுறுசுறுப்பாக
இறங்குவார், வீட்டுக்குள்
போவார், வருவார். அவர் குமாரலிங்கத்திற்குத் தாய்
மாமன்.
திரு. வன்னியசிங்கம் அவர்களை
என்
12ஆவது வயதில்
அவ்வாறுதான் அறியத்
தொடங்கினேன். அவரைப்
பற்றிய செய்திகள்
வீரகேசரியில் வெளியாகும்.
குமாரலிங்கத்துடன் பகிர்ந்து
கொள்வேன். நாள்தோறும் வீரகேசரி நாளிதழைப் படிக்க
என் தந்தையார்
கற்றுக் கொடுத்தார்.
****
சாவகச்சேரித் தொகுதியில் தமிழரசுக்
கட்சி வேட்பாளருக்கு
ஆதரவாக மறவன்புலவு
மக்களிடையே பரப்புரைக்காக
என் தந்தையாரை
அழைத்துச் செல்ல
வரும் அன்பர்களுக்கு
வீட்டில் விருந்தோம்பியதையும் திரு. வன்னியசிங்கம் ஒருமுறை
அங்கு வந்திருந்தையும் பார்த்திருக்கிறேன். அக்காலம் வரை,
திரு. குமாரசாமி அவர்களுக்காகப் பரப்புரை
செய்துவந்த என்
தந்தையார், 1956 தேர்தலில் திரு. வ. ந.
நவரத்தினம் அவர்களுக்காககப் பரப்புரையில் ஈடுபட்டார். தேர்தலில்
திரு. வ. ந.
நவரத்தினம் அவர்கள்
வெற்றிபெற்றார்.
****
மறவன்புலவில் இளையப்பா உபாத்தியாயர்
வீட்டில் அன்பர்கள்
கூடினார்களென்றும் 1956 யூன்
5இல் கொழும்பு
காலிமுகத் திடலில்
நடைபெறவுள்ள மறியலுக்குப்
போகிறார்கள் என்றும்
வயல் வரப்பில்
நிலவொளியில் வைகாசி
மாதச் சோழகக்
காற்றின் மென்மையை
உள்வாங்கியவாறு கணேச
சர்மாவும் தம்பு
அண்ணரும் கதைத்துக்
கொண்டிருந்த பொழுது
15 வயதுப் பையனாகக்
கேட்டுக் கொண்டிருந்தேன்.
திரு. வன்னியசிங்கம் மற்றும்
ஒன்றுபட்ட தமிழ்த்
தலைவர்கள் காலிமுகத்
திடலில் கடுமையாகத்
தாக்கப்பட்டார் என்ற
செய்தியைப் படித்தேன்.
மறவன்புலவில் இருந்து
சென்ற அன்பர்கள்
மறியலில் ஏற்பட்ட
காயங்களுடன் திரும்பியதையும் கண்ணால் பார்த்தேன்.
****
அன்பு, அறம், இரக்கம் ஆகிய மூன்றும்
புத்தரின் வழிகாட்டல்.
ஆனால் புத்தரைப்
பின்பற்றிய அநாகரிக
தருமபாலர், முகமதியர்களுக்கு எதிராகக் கொட்டிய
கடுஞ்சொற்களே, 1915இல்
முகமதியர்களுக்கு எதிராகப்
புத்தர்களான சிங்கள
மக்களே வன்செயலில்
ஈடுபடவும் கலவரத்தில்
பலரைத் தாக்கவும்
காரணமாக இருந்தன.
அதே வேகத்தில் 1937, 1938களில்
மலையாளிகளுக்கு எதிரான
வன்முறையைப் புத்தர்களான
சிங்கள மக்களே
கொழும்பில் தூண்டினர்.
மலையாளிகளுக்கு எதிரான
இயக்கத்தைத் திரு.
ஏ.
இ.
குணசிங்கா வழிநடத்தினார்.
1939இல் கேரளத்தில்
இருந்து சிங்களவருடன்
சமாதானம் பேச
வந்த பொதுவுடைமைத்
தோழர் திரு.
ஏ.
கே.
கோபாலன் உரையாற்றிய
வெள்ளவத்தைக் கூட்டத்தைக்
கலைத்தனர்.
1928
தொடக்கம் மலையகத்
தமிழருக்கு எதிரான
போராட்டத்தைத் திரு.
தொன் இசுரீபன்
சேனநாயக்கா வழிநடத்தினார்.
1948இல் பிரித்தானியர்
வெளியேறியதும் மலையகத்
தமிழரின் குடியுரிமையைப் பறித்தெடுக்கும் சட்டங்களை நாட்டின்
தலைமை அமைச்சராக
அவரே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவித்தார்.
இலங்கைத் தீவில் சிங்கள
புத்தர்கள் தவிர
வேறு எந்த
இனத்தவருக்கும் இடம்
இல்லை என்ற
சிங்கள மக்களின்
தொடர்ச்சியான உளப்பாங்கின்
வெளிப்பாடாக இந்தச்
சட்டங்களைக் கருதிய
தமிழ்த் தலைவர்களுள்
திரு. கு. வன்னியசிங்கம் ஒருவர்.
அகில இலங்கைத் தமிழ்க்
காங்கிரஸ் கட்சியில்
இருந்த, காங்கேயன்துறை நாடாளுமன்ற உருப்பினர்
திரு. சா. ஜே.
வே.
செல்வநாயகம், கோப்பாய்
நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. கு. வன்னியசிங்கம், திருகோணமலை
நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. சிவபாலன், மேலவை உறுப்பினர்
மருத்துவர் ஈ.
எம்.
வீ.
நாகநாதன் ஆகியோர்
கட்சியை விட்டு
வெளியேறினர். அவர்களுடன்
கட்சியின் செயலாளர்
மருத்துவர் வி.
கே.
பரமநாயகமும் சேர்ந்து
கொண்டார்.
முகமதியர், மலையாளிகள், கிறித்தவர்,
மலையகத் தமிழர்
என வரிசையாக,
வரலாறாக, இனவொழிப்புக் கொள்கையையும் வன்முறையையும்
கலந்த அறத்துக்குப்
புறம்பான கண்ணோட்டத்தைச் சிங்கள புத்தர் கொண்டிருந்ததை
உணர்ந்த தமிழர்
தலைவர்களுள் மூத்தவர்களுள்
ஒருவராகத் திரு.
கு.
வன்னியசிங்கம் இருந்தார்.
சிங்கள புத்தரின்
இனவொழிப்புக் கொள்கையானது
வெறுப்பை வளர்க்கும்,
வன்முறையை ஊக்குவிக்கும்,
மனித நேயத்தை
மூழ்கடிக்கும் என்பதை
உணர்ந்தவர் திரு.
கு.
வன்னியசிங்கம்.
****
முகமதியர்களுக்கு எதிரான சிங்கள
புத்தரின் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரித்தானிய அரசு
சிங்களத் தலைவர்களைச்
சிறையிட்டது. சிங்களவரைச்
சிறையில் இருந்து
மீட்க, இரண்டாம் உலகப் போர்க்
கொடுமைகளுக்கு நடுவேயும்
இலண்டன் சென்ற
திரு. பொன்னம்பலம் இராமநாதன் அவர்களுக்குச்
சிங்கள புத்தரின்
உள்நோக்கம் புரியவில்லை.
அக்காலத்தில் தமிழ்ப்
பேசும் முகமதியர்களின் கோபத்துக்கும் திரு. பொன்னம்பலம் இராமநாதன் ஆளானார்.
பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை கேட்ட
இலங்கைத் தேசியக்
காங்கிரஸ் நிறுவனர்
தலைவர் பொன்னம்பலம்
அருணாசலத்துக்குச் சிங்கள
புத்தரின் இனவொழிப்பு
உள்நோக்கம் புரியவில்லை.
சில ஆண்டுகளின்
பின் அவரைத்
தலைமைப் பதவியிலிருந்து சிங்களவர் விடுவித்தபொழுதே ஓரளவு
உணர்ந்தார்.
தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா
என முழங்கி,
தமிழ் மக்களின்
உணர்வு வேகத்தில்
1947 தேர்தலில் வாக்குகளைப்
பெற்ற அகில
இலங்கைத் தமிழக்
காங்கிரஸ் தலைவர்
திரு. ஜீ. ஜீ.
பொன்னம்பலம், மலையகத்
தமிழரின் வாக்குரிமையைப் பறிக்க 1948இன் முதலாவது
சட்ட மூலத்துக்கு
எதிராகவே வாக்களித்தார்.
பின்னர் சிங்களவரின்
வலைக்குள் வீழ்ந்து
1949இன் இலங்கைக்
குடியுரிமை தொடர்பான
துணைச் சட்டத்துக்கு
ஆதரவாக வாக்களித்தார்.
சிங்கள புத்த
மேலாதிக்க உள்நோக்கத்தை
திரு. ஜீ. ஜீ.
பொன்னம்பலம் புரிந்து
கொள்ளவில்லை. உடன்பிறப்புகளான மலையகத் தமிழரின் சினத்துக்கு
ஆளானார்.
திரு. சி.
சுந்தரலிங்கம், திரு.
சிற்றம்பலம் போன்ற
தமிழ்த் தலைவர்களும்
திரு. சேனநாயக்கா அரசுக்கு ஆதரவாக
இருந்தனர். சிங்கள புத்த மேலாதிக்க
உள்நோக்கத்தை திரு.
சி.
சுந்தரலிங்கம், திரு.
சிற்றம்பலம் ஆகியோரும்
புரிந்து கொள்ளவில்லை.
மலையகத் தமிழரின்
வெறுப்புக்குள்ளான தமிழ்த்
தலைவர்களுள் இவர்களும்
அடங்குவர்.
சிங்கள புத்தரின் இனவொழிப்புக்
கண்ணோட்டத்தைப் புரிந்து
கொண்ட தமிழ்த்
தலைவர்கள் 1949இல் மாவிட்டபுரத்தில் திரு.
சா.
ஜே.
வே.
செல்வநாயகம் தலைமையில்
இலங்கைத் தமிழரசுக்
கட்சியைத் தொடங்கினார்.
அந்த முயற்சியில்
அவருக்கு உறுதுணையாக
இருந்தவர் திரு.
கு.
வன்னியசிங்கம்.
1949
திசம்பர் 15ஆம் நாள் கொழும்பில்
நடைபெற்ற இலங்கைத்
தமிழரசுக் கட்சியின்
முதலாவது மாநாட்டில்
நிறைவற்றியதீர்மானம் பினவரும்
கருத்துகளை உள்ளடக்கியது.
சிங்களவர் நிலப்பகுதியில் சிங்கள
ஆட்சி, தமிழர் நிலப்பகுதியில் தமிழர்
ஆட்சி, இரு அரசுகளும் இணைந்த
நடுவண் அரசாகக்
கூட்டாட்சி. இலங்கையின்
இரு மொழிவழி
இனங்களும் ஒரே
நாடாக வாழ்வதற்குரிய
ஆகக் குறைந்த
ஏற்பாடு இது.
இந்தக் கூட்டாட்சி ஏற்பாட்டுக்குச் சிங்களவர் ஒத்துழைக்காவிடில், சிங்களவருக்கும் தமிழருக்கும் தனித்தனி நாடுகள்
ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது.
இவ்வாறான தொலைநோக்குக் கொள்கையை,
அன்பு, அறம், மனித நேயம்,
இரக்கம் சார்ந்த
அரசியல் கொள்கையை
விட்டுச் சென்றவர்
திரு. கு. வன்னியசிங்கம். 400 ஆண்டு
கால அடிமை
வாழ்வுக்கு விடிவு
காண விரும்பிய
தமிழர் திரு.
கு.
வன்னியசிங்கம். சிங்கள
புத்த மக்களுடன்
சமாதானமாக வாழ
விரும்பியவர் திரு.
கு.
வன்னியசிங்கம்.
முகமதியர், கிறித்தவர், மலையகத்தார்,
வன்னியார், மட்டக்களப்பார், யாழ்ப்பாணத்தார் என
அனைவரையும் தமிழ்ப்பேசும்
மக்களாகக் கண்டவர்
திரு. கு. வன்னியசிங்கம். வட்டாரப்
பகைமைகளைப் போக்கி,
இனப் பகைமைகளைப்
போக்கி, மனித நேயத்தை வளர்த்து,
மனித நாகரிக
வளர்ச்சிக்கான நெஞ்சார்ந்த
விழைவுகளுடன் வாழ்ந்த
திரு. கு. வன்னிசிங்கம் அவர்களின்
நினைவைப் போற்றுவோம்.