முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, April 29, 2011

அருட்செல்வர் நா. மகாலிங்கம்


தாங்கள் அன்புடன் அனுப்பிய தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகல் கிடைத்து விபரம் அறிந்தேன்.
பன்னிரு திருமுறைகளைத் தெலுங்குக்கு மொழி பெயர்க்கும் முயற்சி தொடர்பாக, திருமலை திருப்பதி தேவத்தானத்தில், பணியின் மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றதாகவும், திருமலை திருப்பதி தேவத்தான பொறுப்பில் இருக்கும் பல்வேறு பிரமுகர்கள் முன்னிலையில் 2095 தமிழ்ப் பாடல்கள், தெலுங்கு ஒலி பெயர்ப்பு மொழி பெயர்ப்பு என 1342 பக்கங்களில் இரு பகுதி கொண்ட ஒரு தொகுதியாக மீளாய்வுக் கூட்டத்தில் கொடுத்ததாகவும், தாங்களும், ஒருங்கிணைப்பாளர் திரு திவாகரும் தேவையான விளக்கங்களை அளித்ததாகவும், இரு பகுதிகள் கொண்ட  மொழி பெயர்ப்பு தொகுதியினை தவத்திரு குருமகாசந்நிதனானம் அவர்களின் திருக்கண் பார்வைக்காக அனுப்பி வைத்ததாகவும் உள்ள செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
நாம் செய்யும் அறச் செயல்கள் தக்காரை சென்று அடையுமானால்,அது வானையும் சிறிதாக்கி வளர்ந்து நிற்கும், உயர்ந்து பரந்து நிற்கும்.
தங்களின் அரிய முயற்சியைப் பாராட்டுவதோடு, தங்களின் ஆற்றல் மிக்க செயல்களை தமிழ் கூறும் நல்லுலகம் என்று நினைவினில் வைக்கும் என்று கூறி, தங்களின் முயற்சி வெற்றி பெற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளை வணங்கி வாழ்த்துகின்றேன்.                                               

No comments:

Post a Comment