முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 6, 2011

ஆறுமுக நாவலர் தந்த சைவத் தமிழ்ச் சூழல்

உலகம் முழுவதும் தமிழர். 41 நாடுகளில் கணிசமான தொகையில் தமிழர். மேலும் 20 நாடுகளில் சிறு சிறு தொகைளில். மொத்தமாக 2041 (2010)இல் 9.5 கோடித் தமிழர். இவர்களுள் 7 கோடித் தொகையினர் சைவத் தமிழர்.
கடந்த 200 ஆண்டுகளாக, தென்னிந்தியாவுக்கும் ஈழத்துக்கும் அப்பால், 14 நாடுகளில் புதிதாக 4,500 தமிழ்ச் சைவக் கோயில்கள். கடந்த 25 ஆண்டுகளில் மேலும் 20 நாடுகளில் புதிதாக, 500 தமிழ்ச் சைவக் கோயில்கள். தென்னிந்தியாவுக்கும் ஈழத்துக்கும் அப்பால், உலகெங்கும் தோராயமாக, 5,000 தமிழ்ச் சைவக் கோயில்கள்.
கடந்த 1,000 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்கொக்குவில் அரசப் பூங்காவில் நடைபெறும் ஊஞ்சல் விழாவில் தோடுடைய செவியன் எனத் தொடங்கும் தேவாரம் ஓதுதல். தாய்லாந்து அரசரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை ஓதுதல்.
கடந்த 200 ஆண்டுகளாக, கிழக்கே பிஜி நாடு தொடக்கம், மேற்கே கரிபியன் தீவுக் கூட்டம் வரை சூரியன் மறையாமலே கேட்டு வருவது தேவார, திருவாசகங்களை, திருப்புகழை, காவடிச் சிந்துகளை.
இன்றோ, உலகெங்கும் 30 நாடுகளில் திருமுறைகளையும் சைவத் தமிழ் பாக்களையும் பயிற்றுவிக்கும் 25,000 பாடசாலைகள். இங்கே பயிலத் தோராயமாக ஏழு இலட்சம் சைவத் தமிழ் மாணவ மாணவியர் வருகின்றனர்.
ஹவாய்த் தீவில் அமைந்துள்ள சிவன் கோவிலில் ஓதுவார் இசைக்கும் தேவார திருவாசகங்களையும் சேர்த்துக் கொண்டால், சூரியன் மறையாத தமிழ்ச் சைவச் சூழலில் பூமிப் பந்து சுழல்வதை  உணரலாம்.
இவ்வாறு உலகெலாம் உணர்ந்து ஓதுவாற்கு, வேண்டுவார் வேண்டுவதை ஈயும் சிவபெருமான், உலகச் சைவத் தமிழ்ச் சூழலுக்குத் தலைவன்.
முழுமை என உண்டா? முழுமையை அடையலாமா? என்ற வினாக்களின் விடையே சிவநெறி. முழுமையானவர் சத்தியும் சிவனும் ஆய கடவுள். முழுமையற்றது உயிர். முழுமையை நோக்கிய பயணமே பிறவிகளுக்கு ஊடான உயிர்க் கூர்மை. முழுமையை நோக்கிய உயிரின் பயணத்தைத் தடுப்பன மலங்கள். மலங்களின் தடைகளைக் கடக்க, வினைகள் பாற, புலன்களின் வேட்கையைத் தணிவிக்க, மனத்தை வழிப்படுத்த, பார்வதி உடனுறை சிவபெருமானே துணை நிற்கிறார் என்ற அறிவுசார் நிலையே சைவத் தமிழ்ச் சூழலாம்.  
உலகெங்கும் சைவத் தமிழ்ச் சூழலை உருவாக்கி அருள் பெருக்கிய பெருமுயற்சிக்கு நீண்ட வரலாறுண்டு.
புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கி, மேலான நன்னெறி ஒழுக, சைவ நெறிக்கு ஆட்படுத்தக் காலத்துக் காலம், அருளாளர் பெருமக்கள் தொண்டாற்றி வந்துள்ளனர்.
பரசமயகோளரியாகிய திருஞானசம்பந்தர், அடக்குமுறைக்குப் பணிவோம் அல்லோம் என வாழ்ந்த திருநாவுக்கரசர் போன்ற சைவத் தமிழ்ப் போரளிகளின் வழியில் 188 ஆண்டுளுக்கு முன் (திபி 1853 மார்கழியில், 18.12.1822) யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்தவர் ஆறுமுக நாவலர்.
புலமை வளம், பொருள் வளம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். எனவே வாழ்க்கை அவருக்குப் போராட்டமாகவில்லை. ஆனால் போராட்டத்தையே வாழ்க்கையாக்குவதற்கான புறச் சூழல் ஆறுமுக நாவலருக்கு இருந்தது.
சைவத்தையும் தமிழையும் தம் இரு கண்களாகப் போற்றினார். அக்காலச் சூழலுக்கு ஏற்றவாறு சைவத் தமிழ்ச் சூழலைப் பார்த்தார். எதிர்காலத்தில் உலகம் முழுவதும் சைவத் தமிழ்ச் சூழல் அமையுமாறு வழி சமைத்தார்.
பெரிய புராணம் ஒரு கட்டுக் கதை என்றார் தமையனார் தியாகராசா. வெகுண்டெழுந்தார் ஆறுமுக நாவலர்கத்தி ஒன்றை எடுத்தார். மூத்தவர், தமையனார் என்றெல்லாம் பாரார். வெட்ட முனைந்தார், இளமைப் பராய ஆறுமுக நாவலர். அதன் பின் தியாகராசருடன் முகம் கொடுக்கா விரதமிருந்தார். தியாகராசர் இறக்கும் காலை, ஆறுமுக நாவலரை அழைத்தார், நடந்ததற்கு வருந்தினார்.
ஆறுமுக நாவலரின் கொள்கைக்கு இஃது ஓர் எடுத்துக் காட்டு. சைவத் தமிழ்ச் சூழல் பெரிதா, குடும்பம் பெரிதா? சைவத் தமிழ்ச் சூழலே ஆறுமுக நாவலருக்குப் தேவையானதாகத் தெரிந்தது.
 யார்? எவர்? எனப் பாரார், எந்தச் சூழல்? எந்தத் தேவை? எனப் பாரார். சைவத் தமிழ்ச் சூழலுக்குரியதை, சிவநெறி வளர்ச்சிக்குரியதை மட்டுமே நோக்கினார் ஆறுமுக நாவலர்.
அவருடைய போராட்டங்களின் பின்னணி இதுவே.
ஆறுமுக நாவலருக்கு 25 வயது. யாழ்ப்பாணத்து நல்லூர் முருகன் கோயிலில் சிவாகம விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற போராட்டத்தைத் தொடக்குகிறார். 57 வயதில் அவர் இறக்கும் வரை அந்தப் போராட்டத்தைக் கைவிடவில்லை.
கருவறையில் முருகனின் சிலை அமைய வேண்டும். கோயிலில் உயிர்ப் பலி கொடுக்கக் கூடாது. சிவாகம விதிகளைக் கோயிலில் பின்பற்றவேண்டும். இவை போராட்டக் கரு.
உயிர்ப் பலி இன்றில்லை. முருகன் சிலை கொண்ட கருவறைக்காகக் கரூரில் இருந்து கொண்டு சென்ற கருங்கற்கற்களால் கட்டிய கட்டடம் முடிவடையவில்லை. சில ஆண்டுகள் முன்பு வரை முற்றுப்பெறாக் கோயிலாக இருந்த அக் கருவறையின் சான்றுகள் கூட இன்று நல்லூர் முருகன் கோயிலில் இல்லை.
ஆனாலும் ஆறுமுக நாவலரின் முயற்சியால் அவரது 56ஆவது வயதில் தொடங்கிய வழக்கு, அவர் இறந்து 40 ஆண்டுகளின் பின் தீர்ப்பாகி, நல்லூர் முருகன் கோயில் கணக்குகளை ஆண்டுதோறும் நீதிமன்றத்துக்குக் கொடுக்கும் நிலை வந்தது.
தேவதாசிப் பெண்களைத் தமிழ்நாட்டிலிருந்து அழைத்து வந்து ஈழத்துக் கோயில் திருவிழாக்களில் நடனமாடிக் களிக்கும் அடியார்களை ஆறுமுக நாவலர் சாடினார். அந்த வழக்கத்தை விட்டுத் திருமுறைகளைப் பாராயணம் செய்யும் வழக்கத்தை ஊக்குவித்து பெருமளவு வெற்றியும் கண்டார்.
ஆறுமுக நாவலருக்கு 41 வயது. சிவ தீட்சை பெறாத வைதிக பிராமணர்கள், கருவறைக்குள் சென்று திருமேனி தொட்டுப் பூசை செய்யலாகாதுவழிபடலாகதென்பது ஆறுமுக நாவலரின் நிலை. அந்தப் பணியை ஆதி சைவர்களான சிவாச்சாரியார்களே செய்யலாம் என்றார். சுமார்த்தர்களிடம் திருநீறு வாங்குவது பொருத்தமானதல்ல என்பது அவர் வாதம். ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் இக்கருத்துகளைப் பரப்பி வெற்றிகண்டார்.
ஆறுமுக நாவலருக்கு 47 வயது. சிதம்பரத்தில் தில்லையில் தீட்சிதர்கள் வேதவேள்விக்காக உயிர்ப்பலி கொடுக்க முயல்கின்றனர். ஆறுமுக நாவலர் ஒப்பவில்லை. அங்குள்ளவர்களை அழைக்கிறார். கண்டிக்கிறார். தீட்சிதர்களின்  முயற்சி தோல்வியில். இதனால் ஆறுமுக நாவலர் மீது தீட்சிதர்கள் கோபம் கொள்கின்றனர்.
ஆறுமுக நாவலருக்கு 49 வயது. திருமுறைகளே அருட்பாக்கள் என ஆறுமுக நாவலர் கருதினார். சைவத் தமிழ்ச் சூழலுக்குரிய அருட்பாக்கள் வேறு எதுவும் இல்லை என்றார். இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை திருஅருட்பாக்கள் என்றவர்களைக் கண்டித்தார். இந்த வாதம் நெடுங் காலம் தொடர்ந்தது. ஆறுமுக நாவவருக்குப் பின்னும் அவரின் மாணவர் பலர் இந்த விவாதத்தினைத் தொடர்ந்தனர்.
சைவத் தமிழ்ச் சூழலின் எழுச்சிக்கும் தொடர்ச்சிக்கும் மீள்வளர்ச்சிக்கும் மக்களிடையே அறிவு பெருகவேண்டும் என நாவலர் கருதினார். சைவத் தமிழ் நூல்களை அக்கால மக்கள் எளிதில் புரியுமாறு எழுதினார், பதிப்பித்தார். தற்காலப் பதிப்புலகின் தந்தை, தமிழ் வசன நடையின் முன்னோடி என ஆறுமுக நாவலரைப் பாராட்டுவர்.
ஆறுமுக நாவலர் காலத்தில் சைவத் தமிழ்ச் சூழலின் மிகப் பெரிய சவாலாக, கிறித்துவ மதமாற்றம் நடைபெற்று வந்தது. ஈழத் தமிழர்கள் பலர், பணத்துக்காகவும் பதவிக்காகவும் கிறித்துவ மதத்தைக் கைக்கொண்டனர்.
கிறித்துவ மதமாற்றத்துக்கு எதிராக ஆறுமுக நாவலர் நடத்திய போராட்டங்கள் பல.
சைவத் தமிழ்ச் சூழலின் பெருமைகளை விளக்கி, நூல்கள் வெளியிட்டார். கிறித்துவ மதத்தின் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை விளக்கிப் பிரச்சாரம் செய்தார். சைவப் பாடசாலைகளை உருவாக்கினார். சைவ அமைப்புகளை வளர்த்தார்.
தனது நாவன்மையாலும் எழுத்து வன்மையாலும் கிறித்துவ மதமாற்றத்தைப் பெரிதும் தடுத்து நிறுத்தினாார்.
இவரது போராட்டங்களில் இவருக்குத் துணையாக, இவரது மாணவர்கள் பணி புரிந்தனர். காசிவாசி செந்திநாதய்யர், சதாசிவம்பிள்ளை, பொன்னம்பலம்பிள்ளை, சி. வை. தாமோதரம்பிள்ளை, கறோல் விசுவநாதபிள்ளை என இவர் பின்னால் அணி திரண்டோரின் எண்ணிக்கை கணக்கிலடங்கா.
போராட்டங்களையே வாழ்வாகக் கொண்டு 57 ஆண்டுகள் வாழ்ந்தார். திபி 1910 கார்த்திகை மகத்தன்று (5.12.1879) சிவனடிப்பேறு எய்தினார்.
கடந்த 25 ஆண்டுகளாக ஏறத்தாழ 30 நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர், சென்ற இடமெல்லாம் சைவத் தமிழ்ச் சூழலை வளர்த்து வருகின்றனர் எனில், ஆறுமுக நாவலர் தொடக்கிவைத்த சைவ மறுமலர்ச்சிப் பணியே காரணமாகும்
ஆறுமுகநாவலர் வாழ்ந்த காலத்தில் உலகெங்கும் ஐரோப்பிய குடியேற்ற ஆட்சி மேலாதிக்கத்துக்கு எதிரான இயங்கங்களை முன்னின்று நடத்தியோர் சிலர்.



நிலப்பகுதி
பெயர்
Name
திபி ஆண்டு
திபி ஆண்டு
பொது
ஆண்டு
பொது
ஆண்டு
இந்தியா
இராசா இராம் மோகன்ராய்
Raja Ram Mohan Ray
1806
1864
1775
1833
பிரான்சு
பிரஞ்சுப் புரட்சி
French revolution
1820
1789
பிரித்தானியா
கார்ல் மார்க்சு
Karl Marx
1849
1914
1818
1883
இந்தியா
ஈசுவர சந்திர பந்தோபத்தியாயா
Iswara Chandra Bandopathyaya
1851
1922
1820
1891
இலங்கை
ஆறுமுகநாவலர்
Arumuka Naavalar
1853
1910
1822
1879
உருசியா
சார் நிக்கலசுக் காலப் புரட்சி
Tsar Nicholas
1856
1886
1825
1855
அமெரிக்கா
அடிமைத்தனம் நீக்கும் சங்கம்
Anti slavery society
1864
1833
அமெரிக்கா
பெண்விடுதலை
Womens liberation
1864
1833
யப்பான்
மத்தசுகாத்தா மசாயோசி
Matsukata Masayoji
1866
1955
1835
1924
பிரித்தானியா
மக்கள் பட்டயம்
Peoples Charter UK
1869
1838
யப்பான்
இத்தோ இரோபாமி
Ito Hirobami
1872
1940
1841
1909
சீனா
காங்கு யூவை
Kang Ywwei
1889
1958
1858
1927
அமெரிக்கா
ஆபிரகாம் லிங்கன்
1892
1896
1861
1865
இலங்கை
அனாகரீக தருமபாலா
Anakarika Dharmapala
1895
1964
1864
1933
பிரித்தானியா
கிளாத்தோன் சீராக்கம்
Gladstone reforms
1895
1931
1864
யப்பான்
மன்னராட்சி மீட்பு
Imperial Rule restoration
1899
1931
1868
இந்தியா
தயானந்த சரசுவதி
Dayananda Saraswathi
1906
1931
1875
அமெரிக்கா
தியோசொபிக்கல் சங்கம்
Theosophical Society
1906
1931
1875
செவ்விந்தியர்
Red Indians
ஆத்திரேலியா
கூரி
Koori
ஆபிரிக்கா
நீகிரோவர்
Africans
ஆபிரிக்கா
வட ஆபிரிக்கர் இசுலாமியராதல்
Islam in sub Saharan Africa

1 comment:

  1. திருவடி தீக்ஷை(Self realization)
    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.



    Please follow

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

    (First 2 mins audio may not be clear... sorry for that)

    (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)




    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete