முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Saturday, December 31, 2011

என்றுமே கறைபட முடியாத வெள்ளை உள்ளம் கொண்டவர்

மருத்துவர் சண். காளிதாசர்

உடை மட்டுமா வெள்ளை? உள்ளத்தின் வெள்ளையை என்னென்பேன்!

வேறு ஒரு சமயம் வீட்டின் உட்புறமிருந்து கதவில் பொருத்தப்பட்டிருந்த சிறிய கண்ணாடிக் குமிழினூடாகப் பார்த்த பொழுது, வெளியில் அதனூடாக முதல் நாள் நான் நின்ற இடம் முழுவதும் பளிச்செனத் தெரிந்தது. 

மெல்லக் கதவு திறந்தது. வெண்ணிற ஆடையில் சிரித்த முகத்துடன், வாங்க தம்பி, என அன்பொழுக உள்ளே அழைத்துச் சென்று ஓர் அறையைச் சுட்டிக் காட்டி, அந்த அறையில் உடைகளை மாற்றிக்கொண்டு, குளியலறையையும் காட்டி, அதில் கைகால் முகத்தைக் கழுவுங்கள், நான் சாப்பாட்டைத் தயார் செய்கின்றேன் என்றார், சச்சி அண்ணா எனும் அந்தப் பெரியார். 

உலகளாவிய அளவில் தெரிந்த சமூக நலத் தொண்டரும் சிறந்த கல்விமானும் ஐ. நா.வில் பல இலட்சங்கள் ஊதியம் பெறுபவரும் எல்லா விதத்திலும் என்னைவிட உயர்ந்தவருமாகிய அந்தப் பெரியவரின் உபசரிப்பை ஏற்றுக்கொள்ளவும் இயலாமல் தவிர்க்கவும் சக்தி இல்லாதவனாய் நின்றேன். 

எந்தக் கடன் தீர்த்தாலும் இக்கடனை  என்றுமே என்னால் தீர்க்க முடியாது. அப்பெரியாருடைய துணைவியாரும் பிள்ளைகளும் தமிழ்நாட்டின் பிறிதொரு நகரத்தில், பிள்ளைகளின் கல்வி நிமித்தம் தங்கியிருந்தனர். சச்சி அண்ணா அவர்களும் அவரது உறவினரான குறுந்தாடியுடன் ஒருவருமே அவ்வீட்டில் இருந்தனர்.

மறுநாள் காலை எவரும் எழும்பும் முன்பாக, நான் எழுந்து,  வெளியில் சென்று காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு திரும்புவது என்ற தீர்மானத்துடன் படுக்கைக்குச் சென்றேன். அதிகாலை 4.30 மணியளவில் எழும்பி, மெதுவாகக் கதவைத் திறந்தேன்.

என்னே ஏமாற்றம்! தம்பி, முகம் கழுவுங்கள், தேநீர் தயாரித்து விடுகின்றேன் என்ற அப்பெரியாரின் குரல் என்னைக் கூனிக் குறுகச் செய்தது.

தேநீர் பருகுகையில், தோசை வார்க்கின்றேன், சாப்பிடுங்கள் என்றார்.
எல்லாம் முடிந்து திருவானமியூரில் எசுசியை  என்ற நிறுவனத்தின் தமிழ்நாட்டு அலுவலகத்துக்கு என் இந்தியப் பயணத்தின் நோக்கத்தைத் தொடரப் புறப்பட்டேன்.

சச்சி ஐயாவிடம் அனுமதி பெறும் பொழுது, பகலில் பணிமுடித்து இரவில் தங்க வந்து விடும்படி மிகவும் அன்பாக வேண்டினார். மேன்மேலும் கடமைப்பட முடியாது என்பதால், திருவான்மியூரிலேயே தங்கிவிடும் எண்ணத்தை, என் மனதுக்குள் நினைத்துக்கொண்டு விடைபெற்றேன். 

என்றுமே கறைபட முடியாத வெள்ளை உள்ளம் கொண்டவர் இப்பெரியார், தன் எழுபதாவது பிறந்த நாளை எட்டினார் என்பதறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

சண். காளிதாசர்,
மருத்துவர் (ஹோமியோபதி), மறவன்புலவு, சாவகச்சேரி.

No comments:

Post a Comment