முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Saturday, December 31, 2011

பல்லாண்டுகள் வாழ்ந்திடப் பாமாலைச் சரம்தொடுத்தேன்


சங்கரன் தங்கராசா

அன்பால் அரவணைக்கும் சச்சி
ஆனந்தப் பேரொளியாம்
வெள்ளைக் கமலத் திருமேனியும்
வெள்ளையுள்ளம் படைத்த வித்தகரான
கணபதி மைந்தனுக்கு
கார்த்திகைத் திங்கள் பிறந்த நாள்.
மினுங்கும் மேனியர்க்கு
மிருகசீரிடம் நட்சத்திரம்.
பண்பால் படிப்பினை செய்யும்
பசுமை நிறைந்த புனிதரைப்
பாமாலை சூட்டி நான்
பாதம்போற்றி வணங்குகின்றேன்!

வெண்நிலவு உள்ளமும்
வேதியர்க்கான ஒழுக்கமும்
கண் நிறைந்த கட்டழகும்
காலைக் கதிரவன் பேரொளி பரவி
பட்டி தொட்டியெங்கும்
பார் புகழ வாழ்ந்து வரும்
தமிழர்ம் தவப் புதல்வன்
தாயினும் சிறந்த தயாளன்
அறிஞர் அவைக்கு முதல்வன் இவரை
அறியாதார் யாருளர் அவனியில்
வள்ளக்குளத்து வள்ளல் பெருமகனை
வணங்கி மகிழும் எந்தல்யான்!

சோறிடும் பூமிக்குச் சொந்தக்காரன்
சொந்தமிகு உறவுகளின் பந்தக்காரன்
மறவன்புலவு தந்த மழலைதான்  எம்
மண்ணின் புகழ் மணக்கவைக்கும் மறவன்
உலகம் சுற்றிடும் உழைப்பாளி என்றும்
உலகம் சுற்றிடும் இவரை
வேழம் பலம் படைத்து
வேங்கையின் வேகம் கொண்டு
ஞாலம் வலம் வந்து 
ஞானம் எமக்களிக்கும் மூதறிஞர்
பெருகும் புகழுண்டே எனினும்
பெருமிதம் கொள்ளாதவர்
அருளும் ஆண்டவன் சச்சி
ஆனந்தம் வாழ்க வளமுடன்
வாழ்க வாழ்க வாழ்க!

தமிழர் நம் இடர்களைய என்றென்றும்
தளர்வில்லா நற்பணிகள் நல்கி
அயராதுழைக்கும் அண்ணல்
அருளாளர் இவரைப் போல் யாருளார்
இந்து அறப் பணிகள் கூடவே நம்
இறைமை காக்கும் உயர் பணியும்
சிங்களத்துச் சிறுமைகளைச்
சிறகடித்து செய்தியாக்கி
பங்கங்களைப் பறைசாற்றிடும்
படைப்பாளிப் பகலோன்.

சர்வதேச உறவுகளுடன்
சங்கநாதம் இசைக்கும் சான்றோன்
பண்பட்ட உள்ளங்களைப்
பகுத்தறிந்து பாராட்டி
புண்பட்ட எம்மினத்தின்
புலம்பெயர் உறவுகளுடன்
கரம்பற்றி கதை கூறி
காத்தல் கடமை யென்று
கருணை மழைபொழியும்
காவலன் ஐயா
கணபதி மைந்தனைப்
போற்றிடுவோம்!

தேவாரத் திருமுறைகள்
தெய்வீக மணம் பரப்ப
தேமதுரத் தமிழிலும்
தெய்வீகத் தொண்டாக
திக்கெட்டும் திசையிலும் அறியவே
தித்திக்கப் பல் மொழிமாற்றி
திருமுறைகள் திருவிளங்கவைக்கும்
திருத்தொண்டுகளைப் பாராட்டுவோம்!

அருகுவேரூன்றி அதை
ஆலமரமாக்கிய அதிசயன்,
அறவழி நிறுவனம் அமைத்திட்ட
தார புருசன்! புகழ் மணக்குமென்றும்
அன்பைப் போதித்தவர்க்கே! சிறுமதியர்
ஆணவம் அம்பாகிப் பாய்ந்தது
பண்பைக் கொலை செய்த அந்தப்
பாதகர் வினைதான்
வல்லமை கொடுத்த வல்லுனரை அறவழி
வாழ்வகத்தை விட்டகற் வஞ்சனை செய்த
அகந்தையர் அறிவைக் கண்டு
ஆச்சரியமென்ன என்பேன்
தூரத்திலிருந்தாலும் துணைபுரிந்து
துரும்பைத் தூணாக்கித் துக்கிவிட்டவரை
துச்சாதனம் புரிந்த துட்டத்தனம்
துரியோதனன் அவைகண்டீர்!

தமிழின இன்னல்கள்  தரையில் மட்டுமல்ல
தமிழக மீனவர்க்கும் ஈழத் தமிழரினதும்
வங்கக் கடல் முதல் அரபிக் கடல் வரை
இந்துமா சமுத்திரத்தின் பாக்கு நீரிணையிலும்
பாதகம் செய்த படையினர் செயலதனை
விட்டு வைக்காது விலாவாரியாகப் புட்டுவைத்தே
உலக அரங்கில் உண்மை வெளிக்கொணர
ஓயா உழைப்பாளி ஒப்பில்லாப் படைப்பாளி
நாடுகள் பல சென்றே நம் நாட்டில்
நல்லிணக்கம் வேண்டுமென்றார்
ஐக்கிய நாட்டு மேன்மைப் பணிகளில்
பன்னாடுகளிலும் கடமையாற்றிப்
பல்தேசிய இன உறவுகளின்
பாராட்டினை பெற்றிட்ட
பகுத்தறிவுத் தந்தையைப் போற்றுதல்
பாக்கியமே எந்தனுக்கு!

கொள்கை வேந்தரின் வாழ்வில்
கொண்ட பணிகளில் தளர்வில்லை
குடும்ப நலங்களிலும் குறைவில்லை
கொடுத்து வாழும் வள்ளலார்க்கு
எடுத்து வாழும் பழக்கமில்லை.  இவர்
சந்ததிகள் வம் செழித்து வாழ்ந்துவரும்
சங்கதிகள் கண்டு மகிழ்தேன்.

சாதித் துவேசங்கள் அகலச்
சாதிக்கப் பிறந்த சாதனையாளன்
சகல வமும் கொண்டு
சந்தோசங்கள் பெருகிட
சர்வமும் புகழ் மணக்க  இன்னும்
பல்லாண்டுகள் வாழ்ந்திட வேண்டுமென்று
பாமாலைச் சரம்தொடுத்தேன்.
மகிழும் நெஞ்சத்துடன்யான்
மறவன்புலலோ வள்ளக்குளத்து
வேழமுக விநாயர் அடிபணிந்தே
வேண்டுதல் செய்தே வணங்கி
வாழ்த்தி வணங்குகின்றேன்.

வணக்கம்.

================================
சங்கரன் தங்கராசா
தென்மராட்சிப் பிரதேச சபைஉறுப்பினர்,
நவபுரம், கைதடி, சாவகச்சேரி, தொ.பே.0094-774737483      

No comments:

Post a Comment